அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பில் கிருஷ்ணர் மந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு பி.பி.ஏ - எம்.பி.ஏ இணைந்த படிப்பில், பகவத்கீதையில் இருக்கும் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான மந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ராமாயணம், வேத உபன்யாசம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மேலாண்மை தொடர்பான கருத்துகளும் இப்படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மாணவர்கள் அஷ்டாங்க யோகா பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.